Tuesday, June 21, 2011

"அம்மா இங்கே வா! வா!"

குழந்தை வளர்ப்பில் நம்முடைய இந்திய தாய்மார்களை மிஞ்ச யாருமே இல்லை. அவர்கள் தங்களின் அரவணைப்பில் குழந்தைக்கு பாசத்தையும் பண்பையும் ஊட்டி வளர்க்கிறார்கள். சமீப காலமாக இத்தகைய இனிய நிகழ்வுகளை காண்பது அரிதாகி வருகிறது. அதுவும் படித்த மேல்தட்டு வசதியுள்ள தாய்மார்கள் மத்தியில் குழந்தைகள் ஒரு பாரமாகவே ஆகிவிட்டார்கள். இந்த கொடிய நோய் மற்ற நிலைகளுக்கு பரவுவதற்குள் இந்தியர்களாகிய நாம் நம் சகோதரிகளுக்கு குழந்தை வளர்ப்பின் இந்திய முறையின் சிறப்பினை எடுத்துக்கூறவேண்டும். 

இப்போதெல்லாம் இளம் தாய்மார்கள் தங்களின் கைக்குழந்தைகளை தூக்க கஷ்டப்படுகிறார்கள். கேரி பேக் அல்லது முதுகு பாரம் போல ஒரு பெல்டில் குழந்தையை மாட்டி தங்களுடன் இணைத்துக்கொள்கிறார்கள். இது அவர்களுக்கு சவுகரியமாக இருக்கலாம். ஆனால் அவர்கள் சுமப்பது பாரமல்ல குழந்தை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குழந்தையின் பிட்டப்பகுதி இறுகுகிறது. கால்கள் தனியே ஆடிக்கொண்டு வருகிறது. இதனால் கால் பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் தடை படும். வளரும் பருவத்தில் இத்தகைய முட்டுக்கட்டை போடுவதால், கால்கள் சூம்பி போக வாய்ப்புள்ளது. இத்தகைய கொடுமைகள் எதுவும் நம் இந்திய முறையில் இல்லை. இந்திய முறையில் குழந்தையை நெஞ்சோடு அனைத்து தோளில் சுமந்து வருகிறார்கள். குழந்தைக்கு தாயின் மார்பு பகுதி பஞ்சனை போல் செயல்படுகிறது. தன் தாயின் வாசம் அதற்க்கு கிடைத்துக்கொண்டே இருப்பதால் பயமில்லாமல் தூங்குகிறது. உடலின் எந்த பகுதிக்கும் ரத்த ஓட்டம் தடை படுவதில்லை.  

இன்னும் சில தாய் மார்கள் தங்கள் குழந்தைகளை வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வருகிறார்கள். இது மிகவும் தவறு. குழந்தை ஒரு பொருள் என்று கொள்ளக்கூடாது. நாளை நம் குடும்பத்தின் பிரதிநிதி என்று உணரவேண்டும். அவர்களை தனி அறையில் படுக்க வைக்க கூடாது. தாய் தந்தையருடன் தான் படுக்க வைக்க வேண்டும். அதுவும் தாயின் துணியை படுக்கை விரிப்பாகவோ அல்லது தூளியாகவோ கட்டி படுக்க வைக்க வேண்டும். சமீபத்தில் அந்நிய நாடுகளில் நடைபெற்ற ஆராய்ச்சியின் முடிவில் அவர்கள் கண்டது இதுதான்: எத்தனை வயது முதிர்ந்த மனிதராக இருந்தாலும் இந்தியர்கள் தங்கள் தாயிடம் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்கள். அவர்கள் குழந்தைகளாக இருந்த பொது தாயின் வாசத்திலேயே வளர்க்கப்படுகிறார்கள். தாயின் புடவையில் தூளி, மெத்தை விரிப்பு, தோளில் சுமப்பது என்று எப்போதும் அந்த வாசத்திலேயே இருப்பதால் அவர்கள் இயற்கையிலேயே தாயிடம் மிகுந்த பாசம் வைத்திருக்கிறார்கள். இத்தகைய அமைப்பு இல்லாததினால்தான் மேலைநாட்டு குழந்தைகள் மிகச்சிறிய வயதிலேயே தாயின் அன்பை உதாசீனப்படுத்துகிறார்கள், என்று அந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இக்காலங்களில் நம் இந்திய நங்கைகள் நடந்து கொள்வதை பார்க்கும் பொழுது மிக விரைவில் நாமும் அந்நிய நாடுகள் போல் பாசத்தை பறிகொடுக்கும் நிலை வரலாம் என்று எண்ண தோன்றுகிறது.  



No comments:

Post a Comment